2000 லிட்டர் மெத்தனால் பறிமுதல்... பெட்ரோல் பங்க்கிற்கு சீல்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வீரப்பெருமாநல்லூரில் செயல்படாத நிலையில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்க்கில் சுமார் 2000 லிட்டர் மெத்தனால் மற்றும் கள்ளச்சாரயத்தில் கலந்துவிடும் ரசாயனங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 2000 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் கைதான மாதேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது அங்கு மெத்தனால் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த சோதனையில் 2000 லிட்டர் மெத்தனால் இருப்பது தெரியவந்த நிலையில் பெட்ரோல் பங்குக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!