இன்று முதல் டாஸ்மாக் கடைகளுக்கு புது உத்தரவு... ரூ.2000 நோட்டுக்களை வாங்க தடை!

 
டாஸ்மாக் 2000

2016 ம் ஆண்டில் ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு நீக்கம் செய்யப்பட்டன. இதன் பிறகு புதிய ரூ100, ரூ500, ரூ2000  நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. ஆனால் 2018 முதல் 2019 லேயே ரூ2000 நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது.இந்நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் எக்காரணம் கொண்டும் ரூ2000  நோட்டுக்களை வாங்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி ரூ2000 நோட்டுக்களை வாங்கினால் விற்பனையாளர்களே பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் மதுபானப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

டாஸ்மாக் 2000

தற்போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ள நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்னர் இந்தியாவில் சட்டப்பூர்வமான பண பரிவர்த்தனைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  

பணம்

தற்போது இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.  பொது மக்கள் தங்களிடம் கைவசம் இருக்கும் ரூ.2  ஆயிரம் நோட்டுக்களை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web