ஏர் இந்தியா ஊழியர்கள் 25 பேர் அதிரடியாக பணி நீக்கம்
![ஏர் இந்தியா](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/436e442493788b26e7b62cf7746dd952.png)
ஏர் இந்தியா விமான நிலைய ஊழியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று பணிக்கு வராமல் விடுமுறை எடுத்தனர் .இதனையடுத்து இந்தியா முழுவதும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரே நாளில் ஒட்டு மொத்தமாக மெடிக்கல் லீவ் எடுத்த 25 ஏர் இந்தியா ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவதாக டாடா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் படி ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் திடீரென மெடிக்கல் லீவ் போட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டது ஒரு சில விமானங்கள் தாமதமாக சென்றது இந்த நிலையில் ஒரே நாளில் மொத்தமாக விடுமுறை எடுத்ததால் நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் வேலை நிறுத்தம் செய்த 25 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 86 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலைக்கு செல்ல தவறிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 25 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஊழியர்கள் விதிகளை மீறியதால் இந்த பணி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக நிர்வாகம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தினமும் 360 விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியா இனி குறைவான விமானங்களை சில நாட்களுக்கு இயக்கும் என தெரிவித்துள்ளது. டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்தில் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!