பள்ளியில் மதிய உணவு அருந்திய 25 மாணவர்கள் வாந்தி, மயக்கம்!

 
ஆம்புலன்ஸ்


 
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள வரகூர்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல இன்று மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்ற நிலையில் 25 மாணவர்களுக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டது.  பள்ளியில் சமைத்த  உணவில் பூரான் இருந்ததால்தான் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை

மாணவர்கள் மயக்கம் அடைந்த தகவல் பள்ளி ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்து பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.  இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிய உணவு சாப்பிட்டதும் மாணவர்களுக்கு லேசான மயக்கமும், தலை சுற்றிலும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆட்டோ மூலமும், 108 ஆம்புலன்ஸ் மூலமும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் 24 மாணவ, மாணவிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். வருவாய்துறை, கல்வித்துறை உட்பட  பல்வேறு துறை அதிகாரிகளும் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மருத்துவமனை
பள்ளியில் சமைக்கப்பட்ட மதிய உணவில் பூரான் விழுந்தது  குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web