சூப்பர்... சென்னையில் மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள்!

 
ரயில்

 சென்னை  பெரம்பூரில் உள்ள ஐசிஎப் பெட்டி தொழிற்சாலை 1955ல் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த  தொழிற்சாலையில் வந்தே பாரத் ரெயில் உட்பட பல்வேறு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  ஜூன் 4ம் தேதி ரயில்வே அமைச்சகத்தில் இருந்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலைக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில் 2024-25-ம் ஆண்டு செயல் திட்டத்தில் 250 கி.மீ. வேக ரயிலை தயாரிக்கும் திட்டத்தை சேர்க்க ஐ.சி.எஃப்.க்கு ரயில்வேதுறை ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் 2 அதிவேக ரயில்களை முதல்கட்டமாக தயாரிக்கும்படி  ஐ.சி.எஃப். நிறுவனத்திற்கு ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வந்தே பாரத்

 வழக்கமான அகலப்பாதைக்கு பதில் 1435 மி.மீ. அகல தண்டவாள பாதைகளில் ஓடக்கூடியதாக அதிவிரைவு ரயில் தயாரிக்கப்படும். மணிக்கு 250கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியதாக புதிய அதிவேக ரயில் தயாரிக்கப்பட்டாலும் 220 கி.மீ. வேகத்திலேயே-இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.  தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் மற்றும் மோனோ ரயில்கள் ஸ்டாண்டர்டு பாதை ரயில்களை சேர்ந்தவையே. வந்தேபாரத் ரயில்களை போல 8 பெட்டிகளைக் கொண்டதாக 250 கி.மீ. அதிவேக ரயில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் முழுக்க முழுக்க ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்படும்.  இந்த 2 ரயில்களும் 2025 இறுதிக்குள் வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web