260 ராட்சத பலூன்களில் வந்திறங்கிய மலம், குப்பைகள்... பகீர் புகைப்படங்கள்!
வடகொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. சமீபகாலமாக மிகத் தீவிரம் அடைந்துள்ளது. தென்கொரியாவில் வசித்து வருபவர்கள் வடகொரிய அதிபருக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து இதனை வடகொரியாவுக்கே தொடர்ந்து அனுப்பி வந்தனர். இது குறித்த எச்சரிக்கை பதிவுகளை வடகொரிய அதிபர் வெளியிட்டார். எத்தனை முறை கண்டித்தும் இது குறித்து தென்கொரியா கண்டுகொள்வதே இல்லை. இதனால் வட கொரியாவில் இருந்து 260 ராட்சத பலுன்கள் தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ராட்சத பலூன்களில் மலம் மற்றும் குப்பைகளை தென்கொரியாவுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்.




இது குறித்து தென்கொரிய அரசாங்கம் “ ராட்சத பலூன்கள் வந்தால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என தென்கொரியா அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இது போன்று ராட்சச பலூன்கள் வந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ராட்சத பலுன்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தென்கொரியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போர் மூளுமோ என்ற அச்சத்தில் இருநாட்டு பொதுமக்களும் இருந்து வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
