செம... 26000 மாணவ, மாணவிகள் ஏதாவது ஒரு பாடத்தில் 100/100 !

 
மாணவிகள்
 

 தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை பொறுத்தவரை வழக்கம் போல்  மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி 92.37% மாணவர்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  12ம் வகுப்பு தேர்ச்சி முடிவில் 97.45 சதவீதம் மாணவ மாணவிகள் திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்று  முதலிடத்தை பிடித்துள்ளது.  மேலும் 397 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று ‌ சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  

 தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு  மார்ச் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. இதில்   சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.  பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவார்.

தேர்வு முடிவு

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வுத்துறை அதிகாரிகள் தான் இந்த ஆண்டு தேர்வு முடிவை வெளியிட்டுள்ளனர். மொத்தம் 94.56 சதவீதம் பேர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.37% மாணவிகள் தேர்ச்சி விகிதம் ----96.44%. கடந்த ஆண்டை விட 1.26 விழுக்காடு கூடுதல் தேர்ச்சி  0.26 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அதிகம்.  வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே  அதிகளவில் தேர்ச்சி !தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்கலாம் . 35 மாணவர்கள் தமிழிலும், 7 மாணவர்கள் ஆங்கிலத்திலும், 633 பேர் இயற்பியலிலும், 471 பேர் வேதியியலிலும், 652 பேர் உயிரியலிலும், 2587 பேர் கணிதத்திலும், 90 பேர் தாவரவியலிலும், 382 பேர் விலங்கியலிலும் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர் 

தேர்வு தாள்கள் திருத்தும் பணி

 

 

பள்ளி மாணவர்கள்  தாங்கள் படித்த பள்ளிகளில் குறிப்பிட்டுள்ள  செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.  இதுதவிர, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை எந்தவித கட்டணமும் இன்றி அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web