3 அடுக்கு பாதுகாப்பு.... வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிகாலையில் குவிந்த அரசியல் கட்சி முகவர்கள்!
![வாக்கு எண்ணிக்கை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/f3714fc9cb6fd37ed0e5aec0d3794288.png)
இந்தியா முழுவதும் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை சரியாக 8மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முதலாவதாக தபால் வாக்கு எண்ணப்படும். மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா. ஒடிசா போன்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதேபோல தமிழகத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை குறித்தும் செய்தியாளர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படும். EVM இயந்திரத்தின் மூலம் வாக்கு எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து சீல் வைக்கப்பட்ட அறைகளும் காலை 8.00 மணிக்கு திறக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள் அதிகமாக உள்ள இடத்தில் மட்டும் EVM இயந்திரம் மூலம் வாக்கு எண்ணும் பணி 9.00 மணிக்கு தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியின் முகவர்கள் அதிகாலையிலேயே வாக்கு எண்ணும் மையத்தில் குவிந்துள்ளனர். அவர்களை சோதனை செய்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!