3 சவரன் நகைக்காக பரிதாபமாக பறிபோன உயிர்.. கதறும் உறவினர்கள்.. மர்ம நபருக்கு வலைவீச்சு!

 
ரேணுகா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ரேணுகா (வயது 40). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.  ரேணுகா அருகே உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கணவர் மனோகரன் மகா சிந்தானிட்ஸ் என்ற ஸ்வெட்டர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் மனோகரன் தனது இரு மகள்களுடன் கோவை காந்திபுரத்திற்கு சென்றனர். வீட்டில் தனியாக இருந்த ரேணுகாவை அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரிவாளால் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.

கணவர் மற்றும் மகள்கள் திரும்பி வந்து பார்த்தபோது, படுக்கையில் ரத்த வெள்ளத்தில் ரேணுகா இறந்து கிடந்தார். இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் ரேணுகாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேணுகாவின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு கிடைத்த கைரேகை மற்றும் தடயங்கள் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த அவரது உறவினர்கள் ரேணுகாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். பட்டப்பகலில் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து கொலை செய்து நகைகளை திருடிச் சென்று சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web