சோகம்... நடைமேடை மீது பேருந்து ஏறிய விபத்தில் 3 பேர் பலி!!

 
ஆந்திரா

ஆந்திராவில்  விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பயணிகள் ரயிலில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.  இதில்  6 பேர் உயிரிழந்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளனர்.   ஆந்திரா விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணிகள் ரயில் வண்டி எண் 08504 மீது விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்ற ரயில் வண்டி எண் 08532 மோதிய காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து

இதில் 3  ரயில் பெட்டிகள் தடம்புரண்டது. கேபிள் பழுது காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பின்புறமாக மோதி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு   இந்த விபத்து நடைபெற்றது.  விஜயநகர மாவட்ட நிர்வாகம், தேசிய மீட்பு படையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக விஜயநகரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகலட்சுமி தெரிவித்துள்ளார்.    விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு மத்திய மற்றும்  மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web