கல்லூரி விடுதியில் இருந்து 3 மாணவிகள் தப்பியோட்டம்! சென்னையில் வளைத்துப் பிடித்த போலீசார்!

 
கல்லூரி மாணவிகள் ஹிஜாப்

கல்லூரி விடுதியில் இருந்து மங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் 3 பேர், சென்னையில் 4 நாட்களுக்கு பின்னர் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில், மங்களூரு டவுன் விமான நிலைய சாலையில் பி.யூ. என்ற தனியாருக்கு சொந்தமான கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் விடுதியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி கல்லூரிக்குச் சென்று பயின்று வருகிறார்கள்.

மாணவிகள் பெண்கள்

இந்த கல்லூரி விடுதியில் தங்கியிருந்த போது, பெங்களூருவை சேர்ந்த 2 மாணவிகளும், சித்ர துர்காவை சேர்ந்த ஒரு மாணவியும் இணைபிரியாத தோழிகளாக நட்புடன் பழகி வந்திருக்கிறார்கள். எங்கே சென்றாலும், இந்த மூன்று பேரும் ஒன்றாகவே இணைபிரியாமல் சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில், திடீரென்று கடந்த 20ம் தேதி அதிகாலை தோழிகள் 3 பேரும் கல்லூரி விடுதியில் இருந்து தங்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு ஜன்னலை உடைத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து மாணவிகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகிகள், உடனடியாக மாணவிகள் 3 பேரும் விடுதியில் இருந்து தப்பியோடியது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற போலீசார் நடத்திய ஆய்வில், ‘‘மாணவிகளின் புத்தகம் ஒன்றில், தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் பெற்றோரை எதிர்கொள்ள முடியாது `நாங்கள் கல்லூரி விடுதியை விட்டு வெளியேறுகிறாம். எங்களை மன்னித்து விடுங்கள்’’ என்று எழுதி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விடுதியில் இருந்து மாயமான 3 மாணவிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

மங்களூரு mangalore
இந்நிலையில், சென்னையில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த 3மாணவிகளை போலீசார் அழைத்து விசாரித்த போது, அவர்கள் மங்களூரு தனியார் கல்லூரி மாணவிகள் என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து 3 மாணவிகள் குறித்து மங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைவில் மாணவிகளை மங்களூருக்கு அழைத்து செல்லும் பணியில் சென்னை போலீசார் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3 மாணவிகளும் பத்திரமாக சென்னையில் மீட்கப்பட்டது குறித்து மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web