பள்ளி வேன் ரயிலில் மோதி 3 மாணவர்கள் பலி... கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்.!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று காலை கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயற்சித்தது. அப்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் (நிமலேஷ், சாருமதி, செழியன்) உயிரிழந்தனர். மேலும் இதில் வேன் ஓட்டுநர் சங்கர் மற்றும் மாணவர் விஸ்வேஸ் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே கேட் மூடப்படாததால், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியம் காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே துறையால் மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பங்கஜ் சர்மா, வேன் ஓட்டுநர் சங்கர் உட்பட 13 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு படை சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணையில், கேட் கீப்பர் கேட்டை மூடுவதற்கான தகவலை முறையாகப் பெறவில்லை என சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் இது ‘நான்-இன்டர்லாக்கிங்’ கேட் ஆகும், இதில் தொலைபேசி மூலம் தான் தகவல் பரிமாறப்படுகிறது.
இந்நிலையில், பயணிகள் ரயில் கடக்கும் முன் தொலைபேசியில் அழைப்பு வந்தும் பங்கஜ் சர்மா பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. ரயில் வருவதை முன் எச்சரிக்கை செய்ய அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கிவிட்டதாக தெரிகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
