பாகிஸ்தானில் ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகள் .... பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை!

 
பாகிஸ்தான்


 
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து  30 பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர். இவர்களைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை  ராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இது குறித்து  ராணுவ ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,  ஜூலை 2ம் தேதி புதன்கிழமை இரவு வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தின் ஹசன் கேல் பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையைத் தாண்டி ஊடுருவும் முயற்சிகளைப் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்ததாக ஐஎஸ்பிஆர் தெரிவித்துள்ளது.

சிந்தூர் எல்லை இந்தியா பாகிஸ்தான் இராணுவம்
பாதுகாப்புப் படையினர் துல்லியமாகவும், சரியான நேரத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கையில், பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்ற பெரிய குழு பயங்கரவாதிகளின் நடமாட்டத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருந்து  ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் ஊடுருவ முயற்சித்த பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை! 
இந்த வெற்றி எங்கள் எச்சரிக்கை உளவுத்துறை வலையமைப்பின் செயல்திறனையும், எங்கள் படைகளின் செயல்பாட்டு சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்கு "வெளிநாட்டு முகவர்கள்" தங்கள் பிரதேசத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொறுப்பை ஆப்கானிஸ்தான் ஏற்க வேண்டும் என அந்த  அறிக்கையில் கூறப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?