30 வருஷ அனுபவம்... ஆட்சியாளர்கள், அதிகாரிகளிடையே நற்பெயர்... யார் இந்த ஷிவ்தாஸ் மீனா?

 
ஷிவ்தாஸ் மீனா

நாளை ஜூன் 30ம் தேதியுடன் தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெறுகிற நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், யார் இந்த ஷிவ்தாஸ் மீனா என்று பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. 

தமிழக அரசு

ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஷிவ்தாஸ் மீனா, 1964ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி பிறந்தவர். ஜெய்ப்பூர் மாளவியா பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்ற ஷிவ்தாஸ் மீனா, ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 

ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிய மொழிகளை கற்று தேர்ந்துள்ளார். 1989ல் ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக ஷிவ்தாஸ் மீனா பணியில் சேர்ந்தார்.

காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராக தனது பயிற்சியை தொடங்கிய ஷிவ்தாஸ் மீனா, அதன் பின்னர் கோவில்பட்டி உதவி ஆட்சியர், வேலூர் கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என படிப்படியாக பணி உயர்வு பெற்றார்.

இறையன்பு சிவதாஸ் மீனா

அதன் பின்னர் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 

ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்ட இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 தனிச் செயலாளர்களில் ஒருவராக இருந்துள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாடு கேடரில் மிகவும் சீனியரான அதிகாரி. நெருக்கடியான சூழலில் திறமையாக செயல்படக் கூடியவர் என்று ஆட்சியாளர்கள்,அதிகாரிகளிடையே ஷிவ்தாஸ் மீனாவுக்கு நற்பெயர் உண்டு. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web