அடுத்த 3 மணி நேரத்திற்கு 31 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை!!

 
இடி மின்னல் மழை
தமிழகம் முழுவதும் பரவலாக இன்று காலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையம் இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் அடுத்த  3 மணி நேரத்திற்கு 31 மாவட்டங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத்  தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  , சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி  மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் அதே நேரத்தில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகி இருப்பதால் இன்றும் நாளையும் மழை வெளுத்து வாங்கப்போகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று  மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கலாம். மேலும்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

இடி மின்னல் மழை


 இன்று  தமிழகம் ,   புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web