அச்சச்சோ... ஒரே வீட்டு குளியறையில் 35 பாம்புகள்... வைரல் வீடியோ!

 
பாம்பு

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஒரு பாம்புக்கே இப்படி என்றால் ஒரு வீட்டில் கொத்து கொத்தாக 30க்கும் மேற்பட்ட பாம்புகள் குளியலறையில் இருந்தன. புதிதாக கட்டப்பட்டிருந்த வீட்டில் தான் இந்த காட்சி. அங்கு குடியிருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

அஸ்ஸாம் மாநிலத்தில்  நாகோன்  மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருவருடைய வீட்டின் குளியல் அறையில் ஏராளமான பாம்புகள் இருந்தன. இதனையடுத்து அந்த பகுதி விலங்குகள் நல ஆர்வலர்  வரவழைக்கப்பட்டார். அவர்  அந்த பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்தி வனப்பகுதியில் கொண்டு விட்டனர் .


குளியலறையில் பாம்புகள் பதுங்கி இருந்தது குறித்த  வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது . அந்த வீடியோவில் ஒரு பெரிய பாறைக்கு அடியில் பல பாம்புகள் சுருண்டு கிடக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்து கொத்து கொத்தாக பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!