தமிழகம் முழுவதும் 4 ஏடிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்... டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!
Dec 27, 2024, 13:00 IST
தமிழ்நாடு முழுவதும் 4 ஏடிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து வெளியான அறிவிப்பில், கள்ளக்குறிச்சி குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மணிகண்டன் நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அதே போன்று கரூர் மாவட்ட தலைமையக பிரிவின் ஏடிஎஸ்பியாக பணியாற்றி வந்த பிரேமானந்தன் கோவைக்கு மாற்றப்பட்டார்.
நீலகிரி மாவட்ட தலைமையக ஏடிஎஸ்பியாக இருந்த தங்கவேல் காஞ்சிபுரத்துக்கும், திருவண்ணாமலை குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த சவுந்தரராஜன் நீலகிரி மாவட்த்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
