பெரும் சோகம்... நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதி 4பேர் உடல் நசுங்கி பலி!

 
விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்  புக்கத்துறை கூட்டு சாலை பகுதியில் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை விழுப்புரத்தில் இருந்து பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிச் சென்ற  பழுதாகியதால் அங்கேயே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்பக்கம் அதிவேகமாக மோதியது.

விபத்து

அத்துடன்  முசிறியில் இருந்து கிளாம்பாக்கம் வந்த அரசு பேருந்து ஆம்னி பேருந்து மீது மோதியது அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகளால் பயணம் செய்த மேல்மருவத்தூர் மருத்துவர் ராஜேஷ் , சென்னை கொடுங்கையூர்   தனலட்சுமி, பிரவீன் மற்றும் அடையாளம் காணப்படாத ஒரு பெண் உட்பட 4  பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் . மீட்கப்பட்டவர்கள் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து   போலீசார்  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர் . 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web