செங்கல் சூலைக்கு மண் கடத்திய 4 டிராக்டர்கள் பறிமுதல்... கலெக்டர் அதிரடி!

 
ட்ராக்டர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாய பயன்பாட்டிற்கு என அனுமதி பெற்று கண்மாய்களில் மண் எடுத்து சட்டவிரோதமாக செங்கல் சூலைக்கு கடத்திய 4 டிராக்டர்களை சிவகாசி ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் பறிமுதல் செய்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்கு என அனுமதி பெற்று கண்மாய்களில் மண் எடுத்து செங்கல் சூலைகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் சிவகாசி சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் வியாழக்கிழமை இரவு திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

ட்ராக்டர்

அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் -  திருவண்ணாமலை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கி பின்புறம் உள்ள கந்தவேல் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் மண் உடன் நின்ற டிராக்டரை சோதனை செய்த போது, விவசாய பயன்பாட்டிற்கு என அனுமதி பெற்று, கண்மாயிலிருந்து வண்டல் மண் எடுத்து சென்று செங்கல் சூலைக்கு பயன்படுத்த கொண்டு சென்றது தெரிய வந்தது.

ட்ராக்டர்

அதேபோல் அதே பகுதியில் உள்ள அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் நின்ற 3 டிராக்டர்களை ஆய்வு செய்த போது, விவசாய பயன்பாட்டிற்கு என அனுமதி பெற்று களிமண் எடுத்து வணிக நோக்கில் சட்டவிரோதமாக செங்கல் சூலைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. 4 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர்.


இது குறித்து டிராக்டர் உரிமையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, காளிமுத்து, கருப்பசாமி, ராமலட்சுமி மற்றும் ஓட்டுநர்கள் பாலமுருகன், சுந்தர்ராஜ், மகேஸ்வரன், பிரகாஷ் ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் மண்டல துணை வட்டாட்சியர் நிர்மல் குமார் புகார் அளித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web