தமிழகத்தில் 4,00,000 புதிய வாக்காளர்கள்... இரு தினங்களில் குவிந்த விண்ணப்பங்கள்!

 
வரைவு வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் கடந்த இரு தினங்களில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்ப்பதற்கு சுமார் 4,00,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே போன்று வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை மற்றும் நீக்கம் ஆகியவற்றிற்காக சிறப்பு முகாம்கள் 4,5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதன்படி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

6 லட்சம் பேர் விண்ணப்பம்

இந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்கை, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை காட்டி திருத்தங்கள் மேற்கொள்ளலாம் மற்றும் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் ஏராளமானோர் ஆர்வத்துடன் இந்த முகாம்களில் கலந்து கொண்டனர்.

புதிதாக பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்

இதனிடையே இந்த முகாம்களில் 6 லட்சம் பேர் விண்ணப்பங்களை வழங்கி உள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 4 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web