தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 442வது திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

 
தூத்துக்குடி
 

தூத்துக்குடியில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நேற்று சிறப்பு திருப்பலிக்கு பின்னர் மாதா உருவம்  பொறித்த கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
தூத்துக்குடியில் உலக புகழ் பெற்ற பனிமய  மாதா பேராலயத்தின் 442ம் ஆண்டு திருவிழா இன்று ஜூலை 26ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி பனிமய மாதா பேராலயத்தில் நேற்று மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி

இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு, கொடிமரத்தில் ஏற்றப்படும் மாதா உருவம் பொறித்த கொடி மற்றும் காணிக்கை பொருட்கள் ஆலய வளாகத்தில் இருந்து பங்கு தந்தை ஸ்டார்வின் தலைமையில் ஊர்வலமாக நேற்று நான்கு வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு பின்பு ஆலயம் வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மாதாவின் பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா

இன்று ஜூலை 26ம் தேதி காலை 8 மணிக்கு கொடி மரத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடி ஏற்றப்பட்டு திருவிழா துவங்கியது. இந்த திருவிழா அடுத்து  10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web