வைரல் வீடியோ.... 5 ஸ்டார் ஹோட்டல் பால்கனியில் துணியை காயப்போட்ட இந்திய பெண்!
சமூக வலைதளங்களில் தினமும் விதவிதமான வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் துபாயில் 5 ஸ்டார் ஹோட்டலில் இந்திய குடும்பத்தினர் தங்கி இருந்தனர். இவர்கள் துபாயில் தங்கியிருந்த காலத்தில் ஹோட்டல் அறையில் பால்கனியில் துணிகளைத் துவைத்து உலர்த்தி இருக்கிறார். இது குறித்த வீடியோவை அவரது மகன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் “ இந்தியாவில் இருந்து துபாய் வந்திருந்த எனது தாய் பாம் அட்லாண்டிஸ் விடுதியில் தன்னுடைய வழக்கமான வேலைகளை செய்கிறார் . இதை பார்த்த ஹோட்டல் நிர்வாகத்தினர், உங்களுடைய அம்மா தன்னுடைய வழக்கமான வேலைகளை செய்கிறார் .ஆனால் ஒவ்வொரு குளியல் அறையிலும் துணிகளை காய வைக்க தனியாக நாங்கள் ஒரு கருவியைப் பொருத்தி உள்ளோம் .
அதில் தான் நீங்கள் உங்கள் துணியை காய வைக்கலாம்” என பதிலடி கொடுத்துள்ளனர். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களில் சிலர் ஆதரவாகவும், மேலும் சிலர் அந்த பெண்ணுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!