பகீர்... 527 இந்திய தயாரிப்பு உணவுகளில் புற்றுநோய் உருவாக்கும் ரசாயனங்கள்... அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை!

 
கேன்சர்
 

சமீபகாலமாக உணவுப் பொருட்களில் ரசாயனம் அல்லது நச்சுப் பொருட்கள் கலந்து விற்பனைச் செய்யப்படும் போக்கு அதிகரித்து வருகிறது. உணவே மருந்து என இருந்த நமது பாரம்பரிய உணவுகளை மறந்து, உணவே நஞ்சாக மாறும் இந்த கொடுமையை அடுத்த தலைமுறை தினசரி உணவாக சாப்பிட்டு வருகிறது. இது குறித்து பல வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவுடன் இணைக்கப்பட்ட குறைந்தது 527 தயாரிப்புகளில் மாசு மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பதாக  ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.  

கேன்சர்
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உணவின் பாதுகாப்பைக் கண்டறியும் ஆன்லைன் அமைப்பு (RASFF),  பெரும்பாலான கொட்டைகள் மற்றும் எள் விதைகள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள், உணவுமுறை உணவுகளில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயணப் பொருட்கள்  கலந்திருப்பதாக கூறி அதிர்ச்சியளித்துள்ளது.  
கடந்த செப்டம்பர் 2020 முதல் ஏப்ரல் 2024 க்கு இடையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இதன் காரணமாக  87 சரக்குகளை நிராகரித்ததாக அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது. 332 வகையான நச்சு கலந்த உணவு பொருட்களுக்கு  இந்தியா மட்டுமே பிறப்பிடமாக இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.  இந்த உணவுகளில் எத்திலீன் ஆக்சைடு - புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனத்தின் தடயங்கள் உள்ளன. இதற்காக இந்த வகையான உணவுப் பொருட்களை  ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும்  இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கேன்சர்

இந்தியாவை பொறுத்தவரை இந்த அபாயகரமான இரசாயனப் பயன்பாட்டைத் தடை செய்ய அதிகாரிகளால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை. இதில் சேர்க்கப்பட்டுள்ள எத்திலீன் ஆக்சைடு ஒரு நிறமற்ற வாயு. இது பூச்சிக்கொல்லியாகவும், கிருமிகளை நீக்கம் செய்யும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. எத்திலீன் ஆக்சைடின் வெளிப்பாடு மற்ற புற்றுநோய்களில் லிம்போமா மற்றும் லுகேமியாவை ஏற்படுத்தும் அபாயம் அதிகம்.  இதனால்  சுவாச எரிச்சல் மற்றும் நுரையீரல் காயம், தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல் மற்றும் சயனோசிஸ் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.  
எத்திலீன் ஆக்சைடு பெரும்பாலான வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பாக்டீரியா வித்திகள் மற்றும் பூஞ்சைகளைக் கொல்லும். இது உயிரணு சவ்வுகளைத் துண்டித்து நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை வாய்ந்தது EO வின் வெளிப்பாடு கடுமையான பக்க விளைவுகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.பெரும்பாலான மக்கள் சுற்றுச்சூழலில் நச்சு அளவுகள் வெளிப்படும் அபாயம் இல்லாவிட்டாலும், தொழிற்சாலை தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ரசாயனத்துடன் பணிபுரியும் சில மருத்துவமனை ஊழியர்கள் அபாயகரமான விளைவுகளுக்கு ஆளாகிறார்கள்.  


இதனால் வரும் பிற பக்க விளைவுகள்  
நுரையீரல் வீழ்ச்சி 
கோமா
கார்டியோவாஸ்குலர் சரிவு
சுவாச முடக்கம்
வயிற்றுப்போக்கு
மூச்சுத்திணறல்
தூக்கம்
சோர்வு
கண் எரிகிறது
உறைபனி
தலைவலி இவைகளை ஏற்படுத்தலாம்.  
எத்திலீன் ஆக்சைடு டிஎன்ஏவை அழிப்பதால், அது சில புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.  மனிதர்களில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள், ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா, மைலோமா மற்றும் லிம்போசைடிக் லுகேமியா உட்பட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் , மூளை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் , இணைப்பு திசு மற்றும் கருப்பை கட்டிகளை உருவாக்கலாம்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web