6 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்!! அதிரடி உத்தரவு!!

 
ஐபிஎஸ்

தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது துறை வாரியாக அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்  தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி  உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் 

ஐபிஎஸ்

சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை பிரிவு ஐஜி தற்போது கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் சென்னை பரங்கிமலை துணை ஆணையராக இருந்து வந்தார். சென்னை பரங்கிமலை காவல்துறை துணை ஆணையராக தீபக்சிவாச் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5-வது படைப்பிரிவு காமண்டராக செயலாற்றி வந்தார்.

போலீஸ்
தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-வது படைப்பிரிவு காமண்டராக இருந்து வந்த சமய் சிங் மீனா தற்போது சென்னை காவல்துறை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-வது படைப்பிரிவு காமண்டராக குமார்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இவர் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக இருந்து வந்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web