6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... வீட்டை விட்டு வெளியே வராதீங்க!!

 
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் தொடர் கனமழை  பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது . மதுரை,கோவை, தேனி, திருப்பூர் உட்பட 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

விடுமுறை


மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக   வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, , மதுரை, விருதுநகர்  மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  சென்னையை பொறுத்தவரை சென்னை  மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

 

விடுமுறை
 மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை விடாமல் பெய்து வருகிறது.  சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள்  கடும் அவதிக்குள்ளாகினர். தொடர் கனமழை காரணமாக மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர்  மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில்  நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web