சுற்றுலாவில் சோகம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஆற்றில் மூழ்கி பலி... 2 பேர் மாயம்!

 
6 பேர் பலி

 கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில்  வசித்து வருபவர் 40 வயது   நசீர் அகமது. இவர்கள் குடும்பத்தினர்  10 வயது அல்சியா அகமது , 6 வயது  மொகின் அகமது , 38 வயது ரேஷா உன்னிசா, 15 வயது இப்ரா அகமது, 12 வயது  அபித் அகமது என மொத்தம் 8 பேர் ஒன்றாக    உத்தர கன்னட மாவட்டம் தண்டேலிக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.  குடும்பத்தினர் அனைவரும் தண்டேலியில் உள்ள காளி ஆற்றில்  தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

6 பேர்
பேசியபடியே அவர்கள்  ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர்.  ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது, அனைவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கத் தொடங்கினர்.  இதை பார்த்ததும், அங்கிருந்த மக்கள், அவர்களை காப்பற்ற முயற்சித்தனர். யாரையும் காப்பாற்ற முடியவில்லை. கண்முன்னே ஒவ்வொருவராக நீரில் மூழ்கத் தொடங்கினர். உடனடியாக காவல் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர்  தண்ணீரில் மூழ்கிய, அல்சியா அகமது, மொகின் அகமது, ரேஷா உன்னிச, இப்ரா அகமது,, அபித் அகமது ஆகியோரை சடலமாக மீட்டனர். 2 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  வழக்குப்பதிவு செய்து திவீர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்ததும், 2 பேர் மாயமானதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web