பரபரப்பு... காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை... 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

 
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உச்சகட்ட பதற்றம்! 5 பேர் உயிரிழப்பு!


ஜம்மு காஷ்மீரில் குறிப்பிட்ட சில கிராமங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் குல்காம் மாவட்டத்தில் முடர்கம், சானிகம்  கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.  ஜூலை 6ம் தேதி ராணுவ வீரர்கள், மத்திய பாதுகாப்பு படையினர், போலீஸார் இணைந்து  தேடுதல் வேட்டை நடத்தினர்.

ஜம்மு காஷ்மீர்

அப்போது, முடர்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.  இந்த சண்டையில் ராணுவ வீரர் பிரதீப் உயிரிழந்தார். சானிகம் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.  ராணுவ வீரர் ராஜ் குமார் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உச்சகட்ட பதற்றம்! 5 பேர் உயிரிழப்பு!

''சில தீவிரவாதிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி சென்று இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.  எனவே, தேடுதல் வேட்டை தொடர்கிறது” என  காஷ்மீர் காவல் துறை தலைவர் வி.கே.பர்தி தெரிவித்துள்ளார்.   

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web