தமிழகம் முழுவதும் சீமானுக்கு எதிராக 60 வழக்குகள் பதிவு!
கள் இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னை மரங்களை வெட்டியவர் பெரியார். மரத்தை வெட்டி சாய்ப்பதுதான் பகுத்தறிவா? அல்லது எங்கள் தோப்பில் கள் இறக்க அனுமதி இல்லை என்று கூறுவது பகுத்தறிவா? தந்தை பெரியாருக்கும், சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. சமூக நீதிக்காக போராடியது தந்தை பெரியாரா? அல்லது ஆனைமுத்துவா?” என்று கடலூரில் செய்தியாளர்களிடம் சீமான் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழகம் முழுவதுமாக பல்வேறு காவல் நிலையங்களில் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடலூர், மதுரை, கோவை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் சீமான் மீது புகார் அளித்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. திமுக தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!