தமிழக மீனவர்கள் 8 பேர் கைது.. இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம்!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பது வாடிக்கையாகி வருகிறது.
அந்த வகையில் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீனை பிடித்துவிட்டு இன்று அதிகாலை கரைக்கு திரும்பி கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 பேரை, ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது.
வடக்கு மன்னார் கடற்பரப்பில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் விசாரணைக்கு பின் 8 பேரும் மன்னார் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!