சீமான் அதிர்ச்சி... மறுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தில் பதிவான 80,000வாக்குகள்!

 
சீமான்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வழங்க மறுக்கப்பட்ட ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது நாம் தமிழர் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியினருக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது. அதே சமயம் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும், சில சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

சீமான்

இந்நிலையில் தேர்தலில்  போட்டியிட்ட 40 தொகுதி களிலும் நாம் தமிழர் கட்சி தோல்வி அடைந்திருந்தாலும், 8.16 வாக்கு சதவீத வாக்குகளுடன் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்று தமிழகத்தில் கவனம் ஈர்த்தது. அதேநேரம், நாம் தமிழர் கட்சியின் வழக்கமான சின்னமான ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேலூர், திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய 5 இடங்களிலும், 13 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், ‘கரும்பு விவசாயி’ சின்னத்துக்கு மொத்தமாக 79,203 வாக்குகள் விழுந்துள்ளன. குறிப்பாக 7 இடங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக திருப்பூர் தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்தில் நின்ற சுயேட்சை வேட்பாளருக்கு 7,125 வாக்குகள் கிடைத்துள்ளன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web