குடை எடுத்திட்டு போங்க... 9 மாவட்டங்களில் மிதமான மழை!

 
பனி, மழை

 தென்னிந்திய பகுதிகளின் மேல்   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அத்துடன் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழையும்,  திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை ஆகிய மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு  நேரங்களில்  லேசான மழை பெய்து வருகிறது.  

மழை
இந்நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை
அதே நேரத்தில்  இன்று பகலில்  9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, கோவை  ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?