ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சுட்டுக் கொலை... தொடரும் போர்க்கொடூரங்கள்...!!

 
உக்ரைன்

உக்ரைன் ரஷ்யா போர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இங்கு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் தொடர்வதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.   இந்த வன்முறைக்கு பல உலகநாடுகளும்  கண்டனம் தெரிவித்து வருகின்றன.  எனினும், போரானது தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில், உக்ரைனின் கிழக்கே வோல்நோவாகா நகரை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி உள்ளது.  அந்நகரம்2022 மார்ச் மாதத்தில் இருந்து ரஷியாவின் பிடியில் உள்ளது.  

உக்ரைன்
 
இந்த சூழலில், உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியின் வழக்கறிஞர்கள் அலுவலகம் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது. அவற்றில், படுக்கைகளில் பலர் சுடப்பட்டு கிடக்கின்றனர். ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களான அவர்கள் ஒருவரையொருவர் கட்டி பிடித்தபடி காணப்பட்டனர். அந்த பகுதியில் உள்ள சுவர்களில் ரத்தக்கறை படிந்து காணப்பட்டது.

உக்ரைன்

இந்த சம்பவத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு படைகள் அவர்களை படுகொலை செய்து உள்ளது என உக்ரைன் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்ய வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
ராணுவ சீருடையில் ஆயுதங்களுடன் வந்த சிலர், அந்த குடும்பத்தினரை வீட்டை  காலி செய்யும்படி இந்த மாத தொடக்கத்தில் மிரட்டினர். ஆனால், வீட்டு உரிமையாளர் அதற்கு மறுத்து விட்டார். இதனால், அந்த குடும்பத்தினரை அவர்கள் மிரட்டி, தாக்கி விட்டு தப்பி சென்றனர் என உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியின் வழக்கறிஞர்கள் அலுவலகம் வெளியிட்ட முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web