100க்கு 99 கிடையாது... 513 க்கு 99.. மக்களவையில் காங்கிரஸை வெளுத்தெடுத்த பிரதமர் மோடி!

 
பிரதமர் மோடி

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. 27ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திராருபதி முர்மு உரையாற்றினார். இதையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தை பாஜக எம்பி ஆத்மாநாரக் தாகூர் தொடங்கி வைத்தார். இந்த விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். லோக்சபா விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் உரையில், பிரதமர் மோடி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இதற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆவேசமாக பதிலளித்ததால், விவாதம் சூடுபிடித்தது.

இந்நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி தற்போது பேசி வருகிறார்.   எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே பேசிய அவர்,   3வது முறையாக தேர்வு செய்யப்பட்டு 3 மடங்கு வேகத்தில் செயல்படுவோம் என பிரதமர் மோடி பேசினார். முதல்முறையாக லோக்சபா தேர்தலில் கேரளாவில் பா.ஜ., எம்.பி.,வெற்றிப்பெற்றுள்ளது. தமிழகத்தில் போட்டியிட்ட பல இடங்களில் 2வது இடம் பிடித்துள்ளோம். மராட்டியம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம்.

நாங்கள் திறம்பட செயல்பட்டோம் என்பது மக்களுக்கு தெரியும். இந்தியாவை வல்லரசாக மாற்ற நாங்கள் 24 மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கிறோம். 10 ஆண்டுகளில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் விரக்தியில் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. ஏழைகளின் நலனுக்காக உழைக்க மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். வாக்கு வங்கி அரசியல் தேசத்தை சீர்குலைத்துள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்பதற்காகவே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நம்பிக்கை இழந்தனர்.

இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசால் 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 240 இடங்களைக் கூட தொட முடியவில்லை. காங்கிரசுக்கு 100க்கு 99 இடங்கள் கிடைக்கவில்லை. 513 இடங்களில் 99. காங்கிரஸ் கட்சி தோல்வியில் சாதனை படைத்துள்ளது. தற்போது ஒரு ஒட்டுண்ணி காங்கிரஸ். கூட்டணிக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணியாக இருந்து வருகிறது. தம்மை ஆதரிப்பவர்களை ஒட்டுண்ணியைப் போல் உறிஞ்சி எடுக்கிறார்கள். காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்துள்ளது, வாக்கு வங்கி குறைவாக உள்ளது. கூட்டணி கட்சியின் பலத்தை பலமாக காட்ட முயல்கிறது ஒட்டுண்ணி காங்கிரஸ்.   13 மாநிலங்களில் பூஜ்ஜியத்துடன் காங்கிரஸ் தன்னை ஹீரோவாக காட்டி வருகிறது.

நாட்டை பிளவுபடுத்தும் வதந்திகளை காங்கிரஸ் தொடர்ந்து பரப்பி வருகிறது. மக்களவையில் தவறான தகவலை கூறிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த பிரதமர் மோடியின் பதிலில் குடியரசுத் தலைவர் உரை குறித்து பெரிதாக எதுவும் இடம்பெறவில்லை.
2029ல் கூட காங்கிரஸ் கட்சியும், எதிர்கட்சியும் வரிசையில் தான் இருக்கும். 13 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட ராகுல் காந்தி எப்படி ஹுரோவாக முடியும்? இந்துக்களை இழிவுபடுத்த சதி நடக்கிறது. எதிர்க்கட்சிகள் இந்துக்களை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. கூட்டணிக் கட்சிகள் இந்து மதத்தை அவமதித்தபோது, ​​அந்தக் கருத்துக்களை ஆதரித்தவர் ராகுல் காந்தி. “இந்தியாவில் ஜனநாயகம் நிலவுவதற்கு இந்துக்கள்தான் காரணம்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web