பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்து! 2 பெண்கள் உள்பட 5 பேர் பலி!

 
கார் விபத்து பள்ளத்தாக்கு

அரசு பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வேகமாக மோதியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயரிழந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ரா மாநிலம் லத்தூர் மாவட்டம் உட்கீர் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் கோவிலுக்கு சென்று திரும்பி கொண்டிருந்த பக்தர்கள் சிலர் பயணித்தனர். நான்தேத் நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த இடத்தில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

கார் விபத்து

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் பலமாக மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாக போலீஸ் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

விபத்து

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் உயிரிழந்த 5 பேர் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web