தனுஷ் , ஐஸ்வர்யா மீண்டும் இணைய வாய்ப்பு?! ரசிகர்கள் உற்சாகம்!!

 
தனுஷ் ஐஸ்வர்யா

தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளில் குறிப்பிடத்தகுந்தவர் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ராய். இவர்கள் இருவரும் 2004ல் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த தம்பதியர் இருவரும் தாங்கள் பிரியப்போவதாக அறிவித்தனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. 

தனுஷ் ஐஸ்வர்யா

இருவரும் தனித்தனியாக பிரிந்து அவரவர் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி வந்தனர். சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்ற போது தனுஷும் ஐஸ்வர்யாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.  இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் இருவரும் மீண்டும் இணையப்போகிறார்களோ என்று சந்தேகித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் வீட்டில் தனுஷ் - ஐஸ்வர்யா இடையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ்

அதன்படி ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த விவாகரத்து முடிவை ரத்து செய்து மீண்டும் பந்தத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web