அம்மாடியோ..வ்...!! மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!!

 
தங்கம்

தமிழகத்தில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் தொடக்கம் முதலே குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நகை பிரியர்கள், தங்க முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள் பெரும்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
இந்தியாவில் நடுத்தர மக்களின் பெரும் முதலீடாக அமைந்துள்ளது தங்கம் தான்.

தங்கம்

தங்கத்தின் மீதான மோகம் மட்டுமல்ல. அதன்  விலை நாளுக்கு நாள் ஏறி வருவதும் முக்கிய காரணமே. அத்துடன் ஆபத்து காலங்களில் கையில் பணம் இல்லாத சமயம் தங்கத்தை அடமானம் வைத்து கொள்ளலாம் என்பதே பலரின் தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு காரணம். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இறங்கு முகமாக சென்ற தங்கம் விலை தற்போது ஏறுமுகமாகி வருகிறது. தீபாவளி நெருங்கி வரும் சமயத்தில் பலரின் மோகம் அதிகரித்துள்ளது.

தங்கம்

அதே போல்  இனி வரும் நாட்கள் ஆயுத பூஜை, விஜய தசமி என பண்டிகை மற்றும் கொண்டாட்ட காலமாக உள்ளது.  இந்நிலையில் இன்று செப்டம்பர் 29ம் தேதி தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.  சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.4,680 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.440 உயர்ந்து ரூ.37,440 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.61.50 க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ61500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web