பாஜக தலைவர் மகனின் வெறிச்செயல்! 19 வயசு இளம்பெண்ணை சீரழித்த கொடூரம்!
19 வயசு இளம்பெண்ணை, பாஜக தலைவரின் மகன், சீரழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது நாட்டையே உலுக்கியுள்ளது. பாலியல் இச்சைக்கு இணங்காத 19 வயசு இளம்பெண்ணை, கூட்டு பலாத்காரம் செய்து, கொலை செய்து புதைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக பிரமுகர் மகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் பாவரி மாவட்டத்தில் பா.ஜ.க. தலைவராக இருப்பவர் வினோத் ஆர்யா. இவருக்கு யம்கேஸ்வர் தொகுதியில் சொந்தமாக ரிசார்ட் ஒன்று உள்ளது. இந்த ரிசார்ட்டில் ரிஷப்ஷனிஸ்டாக வேலை பார்த்த 19 வயது பெண்ணை கடந்த 18ம் தேதி முதல் காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீசார், பா.ஜ.க. தலைவரின் மகனான புல்கித் ஆர்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர். பா.ஜ.க. பிரமுகரின் மகன் என்பதால் விசாரணையில் சில நாட்களாக தொய்வு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து இளம்பெண் வேலை செய்த ரிசார்ட்டின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
#WATCH | Rishikesh, Uttarakhand: Women gherao the Police vehicle that was carrying the accused in Ankita Bhandari murder case
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 23, 2022
The 19-yr-old receptionist went missing a few days ago & her body was found today. 3 accused, incl Pulkit -owner of the resort where she worked- arrested pic.twitter.com/v3IK8zE1xI
அப்போது சம்பவத்தன்று இளம்பெண் ரிசார்ட்டை விட்டு வெளியே வரவில்லை என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து ரிசார்ட் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, புல்கித் ஆர்யா, இளம்பெண்ணை தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் மறுத்ததால், அவரை கடத்திச் சென்றதாக வாக்குமூலம் அளித்தனர். அதுமட்டுமல்லாமல் இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்ததால் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.
இதைத் தொடர்ந்து புல்கித் ஆர்யா உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இருப்பினும் இளம்பெண் இன்னும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் புல்டோசர் கொண்டு ரிசார்ட்டை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை அம்மாநில முதல்வர் தாமி உத்தரவிட்டதின் பேரில் இரவோடு இரவாக ரிசார்ட் இடிக்கப்பட்டது.
இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக பா.ஜ.க. பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!