BREAKING!! அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி!! அதிர்ச்சியில் திமுக!!

 
அன்பில் மகேஷ்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள், பள்ளிகள், கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வருவதால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அச்சத்தில் உறைந்திருந்தனர். இதனையடுத்து பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி பள்ளிகளில் முகக்கவசம், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்கவும் அதனை நிர்வாகங்கள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அத்துடன் பொது இடங்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. 

அன்பில் மகேஷ்
இருந்த போதிலும்  காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அரசியல்வாதிகள், சாமானியர்கள், மருத்துவர்கள், திரைப்பிரபலங்கள், தலைவர்கள் என பாரபட்சமின்றி பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

+2 பொதுத் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும்! அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

தீவிர  காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  இருப்பதாகவும், சிலநாட்கள் மருத்துவமனையிலேயே உள்நோயாளியாக தங்கி ஓய்வெடுத்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்செய்தியால் திமுக தொண்டர்கள், அமைச்சர்கள்  சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அத்துடன் அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டி தொண்டர்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்த தொடங்கியுள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web