பகீர்! காதலியை கொன்று, உடலை ஆம்புலன்சில் கடத்திச் சென்ற காதலன் கைது!

 
காதல்

வாக்குவாதம் முற்றிய நிலையில், காதலியைக் கொலைச் செய்து, ஆம்புலன்ஸில் காதலின் உடலைக் கடத்தி சென்ற காதலனை போலீசார் துரத்திச் சென்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யானை பகுதியைச் சேர்ந்தவர் சதாம் சையத். இவர் கவிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் அவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் அதித காதலால் தனியாக  குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவர்களுக்கு அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவது இயல்பாக இருந்துள்ளது. அதில் கடந்த 22 ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் சதாமுக்கும் கவிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது இவர்களின் வாக்குவாதம் முற்றிய நிலையில் சதாமு  கவிதாவின் கழுத்தை நெரித்து கொலை  செய்துள்ளார். பின்னர் காதலி இறந்து போனதை உறுதி செய்த பின்னர், அவர்  உடனே கவிதாவின் உடலை மறைக்க வேண்டும் என்று எண்ணியிருக்கின்றார். இதனையடுத்து கவிதாவின் உடலை அங்கிருந்து ஆம்புலன்ஸில் கொண்டு சென்று தூரத்தில் கொண்டு போய் ஏதாவது செய்து மறைத்து விடலாம் என்று திட்டமிட்டு கவிதாவின் உடலை ஆம்புலன்சில் போட்டு கடத்திச் சென்றிருக்கிறார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து  போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். உடனடியாக போலீசார்  அந்த ஆம்புலன்ஸை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். புனே அடுத்த பிஜாப்பூர் நோக்கி ஆம்புலன்ஸ் செல்வதாக  கிடைத்த தகவலின் பேரில் ஆம்புலன்சை துரத்தி சென்று வழிமறித்த போலீசார்  அந்த ஆம்புலன்ஸில் இருந்த கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  சதாம் சையத்தை கைது செய்து  அவர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web