பகீர்! மனைவி, மகள் கழுத்தை அறுத்து கொலை! தப்பியோடிய கணவன்!

 
கொலை

மனைவியையும், மகளையும் கழுத்தையறுத்து கொலைச் செய்து விட்டு தப்பியோடிய கணவனை, போலீசார் கைது செய்தனர். சந்தேகத்தால் இந்த விபரீதம், வாய் தகராறில் துவங்கி, கொலை செய்யும் அளவுக்கு நிகழ்ந்துள்ளது. இன்னொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு மகள் இந்த கொலையில் இருந்து தப்பியுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் நந்தகிராம் காவல் நிலையத்திற்குட்பட்ட சாதிக் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பெண் சடலங்கள் கிடப்பதாக காவல்துறை அதிகாரி முனிராஜிக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு ரேகா (35), அவரது 14 வயது மகள் கழுத்து அறுபட்ட நிலையில் அந்த வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். ஆனால், ரேகாவின் கணவர் சஞ்சீவ் பால் தலைமறைவாகி இருந்தார். 

போலீஸ்

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. ரேகாவிற்கும், வேறு நபருக்கும் தொடர்பு இருப்பதாக சஞ்சீவ் பால் சந்தேகப்பட்டுள்ளார். அத்துடன் ரேகா அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று ஆண் நபர் ஒருவருடன் பழகியுள்ளார். அவர்களின் கள்ளத்தொடர்புக்கு 14 வயது மகளும் உடந்தையாக இருந்துள்ளதாக சஞ்சீவ் பால் கருதியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சஞ்சீவ் பால் முதல் மாடியிலும், அவரது இரண்டு மகள்கள், மனைவி வேறு அறைகளிலும் உறங்கியுள்ளனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் தனது மனைவி ரேகாவிடம், இனி அந்த நபரை சந்திப்பதை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இளம் நடிகர் கைது

இதனால், ஆத்திரமடைந்த சஞ்சீவ் பால், மண்வெட்டியால் தனது மனைவி மற்றும் 14 வயது மகள் கழுத்தை அறுத்துள்ளார். அத்துடன் அவர்களின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். இதன் பின் வீட்டில் இருந்து தப்பிய அவர், தனது நண்பருக்கு போன் செய்து மனைவி, மகளைக் கொன்று விட்டதைத் தெரிவித்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இரட்டைக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பதுங்கியிருந்த சஞ்சீவ் பாலை கைது செய்தனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் காஜியாபாத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web