பகீர் வீடியோ!! லிப் லாக் முத்தம் கொடுக்கும் நாகப்பாம்பு!!
காடுகளுக்குள் திரிந்து கொண்டிருந்த பாம்புகள் தற்போதெல்லாம் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடுகிறது. அவைகளின் வசிப்பிடமான காடுகளை மனிதர்கள் ஆக்கிரமிக்க தொடங்கியதால் தன்னுடைய இருப்பிடம் தேடி வருவதாக பாம்பு பிடிப்பவர்கள் காரணம் தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஒரு சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றது விபரீதத்தில் முடிவடைந்தது.
A man's bid to kiss a cobra goes horribly wrong at Bommanakatte in #Bhadravathi, #Shivamogga district recently. He tried to kiss the snake after rescuing it. @XpressBengaluru @NewIndianXpress pic.twitter.com/GNPDU2uOEP
— Marx Tejaswi (@_marxtejaswi) September 30, 2022
கர்நாடகா ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பகுதியில் வசித்து வருபவர்கள் அலெக்ஸ், ரோனி. இவர்கள், இருவரும் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து, காடுகளில் விட்டு வருகின்றனர். இந்நிலையில், பொம்மனக்கட்டில் உள்ள ஒரு திருமண வீட்டில் 2 நாக பாம்புகள் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், அலெக்ஸ், ரோனிக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் 2 பேரும் அங்கு சென்று பாம்புகளை மீட்டனர். அதில், ஒரு பாம்புக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அதை மீட்ட அலெக்ஸ், அதை வைத்து மக்களுக்கு வித்தை காட்டினார். அப்போது, பாம்பின் தலை பகுதியில் முத்தம் கொடுக்க முயன்றார். ஆனால், பாம்பு திடீரென திரும்பி அவருடைய வாயை கடித்தது. இதை பார்த்து மக்கள் அலறினர். உடனடியாக பத்ராவதி அரசு மருத்துவமனையில் அலெக்ஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து ஷிவமொக்காவில் உள்ள மெக்கான் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்ற அவர், வீடு திரும்பினார். நாகப்பாம்பை பிடித்து முத்தமிடும்போது, அதே பாம்பு அவருக்கு மவுத் கிஸ் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!