சிறையில் கொடூரம்!! கைதிகளை பார்க்க வரும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை!!

 
பாலியல் வன்கொடுமை

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. சிறைக்கைதிகளை பார்க்க வரும் பெண்களை சிறை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 

சிறை

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் அட்டோக் மாவட்டத்தில் சிறை ஒன்று இயங்கி வருகிறது. இதில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்க்க வரும் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் உறவுக்கார பெண்களை சிறை ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இந்த சிறையில் கொடூரமான மாபியா குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற ரீதியில் அத்துமீறல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் இங்கு கஞ்சா, மது உள்ளிட்டவை சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறை

இது குறித்து உளவு மையத்தின் அதிகாரி ஒருவர், சிறைகளுக்கான ஐ.ஜி. மிர்சா ஷாகீத் சலீம் பெய்க்கிடம் ஒப்படைத்துள்ளார். அதில், ‘‘கைதிகளை பார்க்க வரும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மேலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு  ஆளாகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சிறையில் கைதி ஒருவரை சந்திக்க வரும் ஒரு சிறுமி, கைதிகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. வெளியில் ரூ.500க்கு விற்கப்படும் மது சிறைக்குள் ரூ.3,500க்கு விற்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web