திடீரென அடுத்தடுத்து தீ பிடித்து எரிந்த கார்கள்! போலீசார் விசாரணை! சென்னையில் பரபரப்பு!

 
தீப்பிடித்த கார்கள்

சென்னை, பழவந்தாங்கலில் திடீரென இன்று அதிகாலை அடுத்தடுத்து வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தீ விபத்து

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தம்பதியினர் காந்திமணி, ராஜேஷ்குமார். இவர்களுக்கு சொந்தமான 2 கார்கள் அவர்களது வீட்டின் முன்பு அருகருகே நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை 5 மணியளவில் திடீரென இரண்டு கார்களும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காந்திமணியும், ராஜேஷ்குமாரும் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து தீயை அணைக்க முயற்சித்தனர். தகவலறிந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

தீ விபத்து

இருப்பினும் இந்த தீ விபத்தில் இரண்டு கார்களும் முற்றிலுமாக எரிந்து நாசமானது. வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் எப்படி தீ பிடித்து எரிந்தது? கார்களை மர்ம நபர்கள் யாரேனும் முன் விரோதம் காரணமாக எரித்தார்களா? என்பது குறித்து வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராவைக் கைப்பற்றிய பழவந்தாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மார்கழியில் ஏன் சுபகாரியங்களைச் செய்ய கூடாது?!

From around the web