கல்லூரி மாணவி சக மாணவரால் பலாத்காரம்! பெற்றோர்கள் அதிர்ச்சி!

 
பாலியல் வன்கொடுமை

நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்று கல்லூரி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சகமாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவியை, நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்று, சக மாணவனே பாலியல் ரீதியாக துன்புறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த  17 வயதுடைய மாணவி, பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மாணவி படித்து வரும் அதே கல்லூரியில் கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவர் ஒருவரும் படித்து வருகிறார். 

பாலியல் வன்கொடுமை

இருவரும் ஒரே கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், மாணவியைக் காதலிப்பதாக அந்த மாணவர் கூறியுள்ளார். அவரது காதலை மாணவியும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், கல்லூரி மாணவி திடீரென மாயமானார். மகளைப் பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் பெற்றோர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவி காணாமல் போய் 2 நாட்கள் கடந்த நிலையில், மாணவி தனது வீட்டிற்கு திரும்பினார். மாணவியைக் காணாமல் இருந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்ததில், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள அவரது நண்பர் வீட்டுக்கு மாணவியை அழைத்து சென்றதாகவும், அங்கே தன்னிட்டம் பலவந்தமாக பாலியல் ரீதியாக அத்து மீறியதாகவும், இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறினார். 

இதைக் கேட்டு அதிர்ச்சிடடைந்த பெற்றோர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அந்த மாணவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். 

நேற்று காலையில் நாகர்கோவிலில் வைத்து அந்த மாணவனை மகளிர் போலீசார் கைது செய்தனர். காதலிப்பதாக ஏமாற்றி, கல்லூரி மாணவியை நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்று, பலவந்தமாக பாலியல் அத்துமீறலில்  ஈடுபட்டு சீரழித்த சக மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web