போலீஸ் உடையில் தியேட்டர் மேலாளருக்கு மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவன்!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
இளம் நடிகர் கைது

பள்ளி, கல்லூரி மாணவர்களின் அலட்டல், அலப்பறைகள் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் இவை விபரீதத்தில் முடிந்து விடும் போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  திருவள்ளூர் மாவட்டத்தில்  மணவாள நகரில் பிரபலமான ஒரு சினிமா தியேட்டர் இயங்கி வருகிறது. இங்கு போலீஸ் உடையணிந்த நபர் ஒருவர் நேற்று காலை 11 மணியளவில் சென்றார். தியேட்டரில் இருந்த நிர்வாகிகளை அந்த நபர் திடீரென்று மிரட்ட ஆரம்பித்து விட்டார். அந்த நபர் கூறும்போது, ‘‘பள்ளி நேரத்தில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சினிமா பார்க்க வருவதாக எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வருகிறது. என்ன நடக்கிறது இங்கே?’’ என்று மிரட்டும் தோரணையில் விசாரித்தார்.

போலீஸ்

அதைத் தொடர்ந்து தியேட்டருக்குள் இப்போது படம் பார்ப்பவர்கள் எத்தனை பேர்? அதில் பள்ளி மாணவர் எத்தனை பேர்? என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றார். ஆவடியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் தான் போலீசாக பணியாற்றுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனால் சினிமா தியேட்டர் மேலாளருக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக இது குறித்து மணவாளநகர் போலீசாருக்கு போன் மூலம் புகார் செய்தார். 

திருவள்ளூர்

தியேட்டருக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த மர்ம நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபரின் பெயர் சிவபிரகாசம் (22) என்பதும், அவர் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை காந்தி நகரில் வசித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. மேலும் சிவபிகாரம் சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வரும் ஒரு தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு ரேடியாலஜி படித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் வேடம் அணிந்து சினிமா தியேட்டர் மேலாளரை மிரட்டிய குற்றத்துக்காக கல்லூரி மாணவர் சிவபிரகாசத்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web