மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் மீது புகார்! நீதிமன்றம் உத்தரவு!

 
ஸ்ரீமதி

மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை, பெற்றோர்கள் ஆய்வுக்கு தர மறுத்து வந்த நிலையில், செல்போனை தருமாறு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றக் கோரி கோரிக்கை விடுத்த நிலையில் வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரித்து வருவதால் இந்த மனுவை ஏன் முடித்து வைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீமதி தாய்

இதற்கு பதில் அளித்த மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர், வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதை சுட்டிக்காட்டினர்.

ஸ்ரீமதி

மேலும் வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுப்பதாகவும், விடுதியில் மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை வழங்க அவர்கள் மறுப்பதாகவும் மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்க பெற்றோர்கள் மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

இதையடுத்து, மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை புலன் விசாரணை செய்யும் சிபிசிஐடியிடம் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு  உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த அறிக்கையை அக்டோபர் 30ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

From around the web