தொடரும் சோகம்! 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!!

 
திருச்சி

17 வயது சிறுவன் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்து வாத்தலை அருகே உள்ள செந்தாமரைக்கண் பகுதியை சேர்ந்த செல்வக்குமார். இவரது மகன் லோகேஷ் (17). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்து விட்ட நிலையில், தாயாா், 2 சகோதரிகள், சகோதரருடன் வசித்து வந்த லோகேஷ், 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு, தற்போது கொத்தனா் வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த லோகேஷ். அவரது தாய் ராஜேஸ்வரி கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வருவதற்குள் வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மாணவர் தற்கொலை

இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாத்தலை போலீசார் லோகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

காதலர்கள் தற்கொலை

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

From around the web