கொடூரம்! போதையில் தாயை அடித்து கொன்ற மகன் தலைமறைவு!

 
கொடுங்கல் வாங்கல் பிரச்னையில் கோவை சிறுமி கொலை- உறுதி செய்தது போலீஸ்..!!

போதை  தலைக்கேறியதால், என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தாயை அடித்துக் கொன்ற மகன், போதை இறங்கியதும் தப்பிச் சென்று தலைமறைவான கொடூர சம்பவம் மங்களூரில் நடந்துள்ளது.

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா ஹலாடி அருகே அமைந்துள்ள கசாடி கரிமனே கிராமத்தில் வசித்து வந்தவர் பார்வதி. இவரது மகன் கிருஷ்ணா நாயக் மற்றும் ஸ்ரீமதி என்ற மகளும் உள்ளனர். இதில் மகன் கிருஷ்ணா நாயக் குடிபோதைக்கு அடிமையாகி இருந்தார்.

தினமும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததால் கிருஷ்ணாநாயக்கிற்கும் தாய் பார்வதிக்கும் இடையில் அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. இதே போன்று கடந்த 18ம் தேதியும் கிருஷ்ணாநாயக் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததால் தாய் பார்வதியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 

க்ரைம்
இதனால் ஆத்திரமடைந்த பார்வதி கிருஷ்ணா நாயக்கை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், பார்வதியை தாய் என்று கூட பார்க்காமல் சரமாரியாக தாக்கினார். இதில் பார்வதி படுகாயமடைந்தார். அடித்து, உதைத்தார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த மகள் ஸ்ரீமதி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பார்வதியை மீட்டு குந்தாப்புரா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். 

போதை குடி சாராயம் குற்றம் க்ரைம்

முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர் பார்வதி மங்களூரு வென்லாக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பார்வதி துரதிருஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து அவரது மகள் ஸ்ரீமதி, சங்கரநாராயணா போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாயை அடித்துக கொன்று விட்டு தலைமறைவான கிருஷ்ணா நாயக்கை தீவிரமாக தேடி வருகிறார்கள். குடி போதையில் பெற்ற தாயையே மகன் அடித்து கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை கவலையடைய செய்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web