பிரபல நடிகை மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் அதிர்ச்சி!

 
தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முண்ணனி கதாநாயகியாக ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் 2006ல் கன்னடத் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால்  2007ல்  ஃபாரா கான் இயக்கத்தில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் மூலம் தான்  இந்தியா முழுவதும் பிரபலமானார். தற்போது வரை தேடப்பட்டு வரும் கதாநாயகியாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் லேட்டஸ்ட்டாக  பதான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தீபிகா படுகோனே

இப்படத்தில் ஜான் ஆபிரகாமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாக உள்ளது.

பதான் தவிர, தீபிகா படுகோன், ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஃபைட்டர் படத்தில் நடித்துள்ளார். பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்திலும் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகையான தீபிகா படுகோனுக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன் பின் அவருக்கு தொடர்ச்சியாக பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின்பு அவர் உடல்நலம் தேறி வருகிறார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

குட் நியூஸ்! கொரோனாவில் இருந்து மீண்டார் படுகோனே!

கடந்த ஜூனில் ஐதராபாத்தில், நடிகர் பிரபாஸ் உடனான படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது, தீபிகாவுக்கு இதய துடிப்பு விகிதம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து அவர் உடல் பரிசோதனைக்காக காமினேனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web