பரபரப்பு!! பொன்னியின் செல்வன் வெளியான திரையரங்குகளில் திடீர் சோதனை!! ரசிகர்கள் கடும் அவதி!!

 
பொன்னியின் செல்வன்

தமிழ் திரையுலகில் பலரின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் இன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரசிகர்கள் மிகுந்த ஆர்பாட்டத்துடன் பெரும் எதிர்ப்பார்ப்புடனும் ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். 

பொன்னியின் செல்வன்

கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது. திரையரங்கில் குவிந்துள்ள மக்கள் ஆரவாரத்துடன் படத்தை ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் இன்று படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர்.

பொன்னியின் செல்வன்

அப்போது காலாவதியான குளிர்பானங்கள், அங்கு வைத்திருந்த பாலில் பூச்சிகள் விழுந்திருந்தது தெரியவந்தது. அந்தப் பாலை பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு அபராதம் விதித்தனர். இதனால் திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையொட்டி ரசிகர்கள் படம் பார்ப்பதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. இதன் பின் படம் ஒளிபரப்பானது. இந்த சோதனை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web